அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய பஞ்சாப் அமைச்சருக்கு 1 ஆண்டு சிறை
சண்டிகர்: அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் பஞ்சாப் மாநில விவசாயத்துறை அமைச்சர் தோடாசிங்குக்கு ஓராண்டு சிறைத்தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது.
பஞ்சாப் அமைச்சர் தோடாசிங் மீது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினார், வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்தார் என வழக்குத் தொடரப்பட்டது. இதில் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ரூ30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் விடுவிக்கப்பட்டார்.
அமைச்சர் அபராதத்தைக் கட்டவில்லையெனில் மேலும் 6 மாதங்கள் அவர் சிறையிலிருக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டது. ஆனால் அமைச்சர் உடனடியாக அபராதத் தொகையைக் கட்டிவிட்டார். இதைத் தொடர்ந்து ஜாமீன் கோரி மேல் முறையீடு செய்ய அவரை நீதிமன்றம் அனுமதித்தது.
பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் அமைச்சரவையில் இருந்த ஜாஹிர் கவுர் மகளை கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து 2-வது அமைச்சராக தோடாசிங் சிறைக்குப் போகிறார்.












Click it and Unblock the Notifications