மதுரை ஆதீனத்தின் செயலாளர் வைஷ்ணவியிடம் விசாரணை நடத்திய ஐடி அதிகாரிகள்

தமிழகத்தில் மொத்தம் 18 ஆதீன மடங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மதுரை ஆதீனமும் ஒன்று. இந்த ஆதீனம் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மதுரை ஆதீனத்திற்கு தமிழகம் முழுக்க பல கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளது.
இந்த ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாக நித்யானந்தா-வை 292 வது மதுரை ஆதீனம் அருணகிரி நியமித்துள்ளார். இதற்காக ரூ.1 கோடி வரை செலவு செய்துள்ளார் நித்யானந்தா. மேலும் ரூ 4 கோடியை மதுரை ஆதீனத்துக்கு காணிக்கையாக தருவதாகவும் அறிவித்துள்ளார்.
பல்வேறு சர்ச்சைகள் மற்றும் வழக்குகளில் சிக்கியுள்ள நித்யானந்தாவை மடாதிபதியாக நியமித்துள்ளதற்கு தமிழகத்தில் உல்ள பல்வேறு ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை மற்றும் மதுரை நீதிமன்றங்களில் வழக்குகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், மத்திய அரசின் வருமான வரித்துறை மதுரை ஆதீனத்தில் நேற்று காலை முதல் பிற்பகல் வரை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
மண்டல இணைக் கமிஷனர் தலைமையில் 7 அதிகாரிகள் குழு இந்த சோதனையை பிற்பகல் 1.30 மணி வரை நடத்தியது. இந்த சோதனையின்போது சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. கணக்கில் வராத பணம் ஏதும் சிக்கியதா என்பது குறித்துத் தெரியவில்லை.
சோதனையின்போது மதுரை ஆதீனம் அங்குதான் இருந்தார். ஆனால் நித்தியானந்தா இல்லை என்று தெரிகிறது.
இந்த சோதனையின்போது சர்ச்சைக்குரிய இளம் பெண் வைஷ்ணவியும் அங்குதான் இருந்தார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. இவரை இடையில் காணவில்லை என்று பரபரப்பு கிளம்பியது. ஆனால் வைஷ்ணவி தொடர்ந்து அங்குதான் இருப்பதாக தெரிகிறது. நேற்று நடந்த சோதனையின்போது வைஷ்ணவியையும் அதிகாரிகள் விசாரித்துள்ளனர். அப்போது அவரிடமிருந்து என்ன தகவல்கள் பெறப்பட்டன என்பது தெரியவில்லை.
மதுரை ஆதீனம் முன்பெல்லாம் நிறைய நகைகள் போட மாட்டார். ஆனால் சமீப காலமாக அவர் நிறைய நகைகளை அணிந்தபடி காணப்படுகிறார். மேலும் தங்கத்தின் புழக்கமும் அவரது மடத்தில் தற்போது பெருமளவில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. நித்தியானந்தாவின் வருகையும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்தே வருமான வரித்துறையினர் ரெய்டுக்கு வந்து விட்டனர் என்று கூறப்படுகிறது.
படம்: நக்கீரன்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications