கேரள அமைச்சர் மீது உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- நெடுமாறன்
சென்னை: கேரளாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட தங்களுக்கு ஆதரவாகச் செயல்படவில்லை என்பதற்காக முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸை கடுமையாக விமர்சித்துள்ளார் கேரள நீர்ப்பாசன்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப். எனவே அவர் மீது உச்சநீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
முல்லைப்பெரியாறு அணை வலிமையாக இருக்கிறதா என்பதை ஆராய்வதற்காக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட உயர்நிலைக் குழு அணையின் நீர்மட்டத்தை அதிகபட்சம் 152 அடி வரை உயர்த்தினாலும் அணை மிகுந்த பாதுகாப்பாகவே இருக்கும்.
1979-ம் ஆண்டுக்கு முந்திய நிலையில் அணையில் நீரைத் தேக்கலாம் என திட்டவட்டமாகவும் தெளிவாகவும் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளைக் கொண்ட குழு அளித்த அறிக்கையைக் கண்டித்து கேரள நீர்வளத்துறை அமைச்சர் பி.ஜே. ஜோசப் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தரம் தாழ்ந்தவையாகும்.
குறிப்பாக நீதிபதி தாமஸ் கேரளாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் தங்களுக்கு ஆதரவாகச் செயல்படவில்லை என்று கூறியிருப்பதற்கு உச்சநீதிமன்றம் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெடுமாறன் கூறியுள்ளார்.
பெண்ணிடம் சில்மிஷம் செய்து சிக்கியவர்
நீதிபதி கே.டி.தாமஸை கடுமையாக விமர்சித்துள்ள அமைச்சர் பி.ஜே.ஜோசப், கேரள டிவி செய்தி வாசிக்கும் பெண் ஒருவரிடம், ஓடும் வி்மானத்தில் செக்ஸ் சில்மிஷம் செய்ததாக சர்ச்சையில் சிக்கியவர் என்பது நினைவிருக்கலாம்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications