ராவணன் வெளியே... நடராஜன் இன்னும் உள்ளே!
சென்னை: சசிகலாவின் உறவினரான எம்.ஆர்.பி ராவணனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதை அடுத்து அவர் இன்று சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் வீடு அபகரிப்பு முயற்சி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு காவல் நீட்டிப்பு வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவிற்கும், அவரது உடன்பிறவா சகோதரி சசிகலாவிற்கும் ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து முதன் முதலில் கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி சசிகலாவின் உறவினர் ராவணன் கைது செய்யப்பட்டார்.
தொடர் வழக்கு
அதன் பிறகு கோவை மாவட்டம் சிறுமுகையை சேர்ந்த கான்ட்ராக்டர் ரவிக்குமாரிடம் ரூ.10 லட்சம் பறிப்பு, மணல் கான்ட்ராக்ட் வாங்கி தருவதாக கூறி வேலூரை சேர்ந்த ரவி, திருப்பூரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, சைதாப்பேட்டையை சேர்ந்த யுவநேசன் ஆகியோரிடம் தலா ரூ.1 கோடி மோசடி உள்பட 5 வழக்குகளில் சசிகலா உறவினர் ராவணன் கைது செய்யப்பட்டார்.
ராவணன் வெளியே
இந்த 5 வழக்குகளிலும் பலமுறை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். மேட்டுப்பாளையம், சிறுமுகையில் பதிவான இரு வழக்கிலும் கோவை மாவட்ட நீதிமன்றம் ராவணனை ஜாமீனில் விடுவித்தது. சைதாப்பேட்டை நீதிமன்றமும் ஜாமீனில் விடுவித்தது. ஆலந்தூர், வேலூர் நீதிமன்றங்கள் திங்கட்கிழமை ராவணனை ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டன.
இதையடுத்து ராவணன் சிறையில் இருந்து விடுதலையாக உள்ளார்.
நடராஜன் உள்ளே
அதேசமயம் வீடு அபகரிப்பு முயற்சி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட நடராஜனுக்கு காவல் நீட்டிப்பு வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை தமிழ் நகரைச் சேர்ந்த சகுந்தலா என்பவர் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடராஜன் மற்றும் சிவக்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கில் திங்கள்கிழமை காவல் முடிந்தது.
இந்த நிலையில், தஞ்சை 3 வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கார்த்திகா வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்து, வரும் மே 21ம் தேதி வரை நடராஜனுக்கு காவல் நீடிப்பு செய்து உத்தரவிட்டார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications