அணை கட்ட சுப்ரீம் கோர்ட் அறிக்கை சாதகமாக உள்ளது: உம்மன்சாண்டி

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்ச நீதிமன்ற குழு தாக்கல் செய்த அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் உம்மன்சாண்டி நிருபர்களிடம் கூறுகையில்,
உச்ச நீதிமன்ற குழுவின் அறிக்கை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணை மேலும் 100 ஆண்டுகள் பலமாக இருக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டு இருப்பது உண்மை தான். இருப்பினும் சில நிபந்தனைகளுடன் கேரள அரசு புதிய அணையை கட்டலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
எனவே புதிய அணை கட்டத் தேவையான நடவடிக்கையை கேரள அரசு எடுக்கும். இது தொடர்பாக உச்ச நீதமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது கேரள அரசு தெரிவிக்கும். அணை பலமாக உள்ளது என்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. எனவே, நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து உயர்த்தக் கூடாது. உச்ச நீதிமன்ற குழுவில் இடம் பெற்ற நீதிபதி தாமஸ், கேரளாவின் பிரதிநிதி மட்டுமே. குழுவில் கேரளாவுக்கு சாதகமான கருத்துகளை அவர் கூறியுள்ளார். ஆனால் அணையின் பாதுகாப்பு குறித்து மட்டும் அவர் கேரளாவி்ன் கருத்துக்களை தெரிவிக்கவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications