மதுரையில் பாஜக மாநில மாநாடு தொடங்கியது- இரவு அத்வானி பேசுகிறார்

பாஜகவின் 5வது மாநில மாநாட்டை தாமரைச் சங்கமம் என்றபெயரில் மதுரையில் ஏற்பாடு செய்துள்ளனர். கடந்த மாதமே நடந்திருக்க வேண்டிய மாநாடு இது. ஆனால் கன மழை காரணமாக மாநாடு இன்று காலை 10 மணிக்கு் தொடங்கியது. 2 நாட்கள் மாநாடு நடைபெறும்.
விரகனூர் ரிங் ரோட்டில் கிட்டத்தட்ட 37 ஏக்கர் நிலப்பரப்பில் ஜனா கிருஷ்ணமூ்ர்த்தி நகர் என்று பெயரிடப்பட்டுள்ள மாநாட்டுத் திடலில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டு அதில் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டு மேடையை தாமரைப் பூ வடிவல் அமைத்துள்ளனர்.
மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கட்சிக் கொடியேற்றி மாநாட்டை அகில இந்தியத் தலைவர் நிதின் கத்காரி தொடங்கி வைத்தார்.
இன்று மாலை அத்வானி, சுஷ்மா, அருண் ஜேட்லி, வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், இல.கணேசன் உள்ளிட்டோர் பேசுகிறார்கள். மாநாட்டையொட்டி பெருமளவிலான தொண்டர்கள் குவி்ந்துள்ளனர்.
இன்று பொது மாநாடாக இது நடைபெறும். நாளை கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
மாநாட்டில் பல லட்சம் தொண்டர்களைத் திரட்டி திராவிடக் கட்சிகளுக்கு தங்களது பலத்தைக் காட்ட பாஜக திட்டமிட்டுள்ளது. இதனால் தொண்டர்களைத் திரட்டி வர விரிவான ஏற்பாடுகள் செய்யபப்பட்டுள்ளன. மாநாட்டுக்கு வருவோரிடம் நுழைவுக் கட்டணமாக ரூ. 10 வசூலிக்கப்படும். நுழைவுச் சீட்டுப் பெறுவோரிடம் 3 வேளை சாப்பாட்டுக்குரிய டோக்கனையும் கொடுக்கிறார்கள்.
சமீபத்தில் மதுரை அண்ணா நகர் பகுதியில் சைக்கிளில் வெடிகுண்டு வைத்து அது வெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அத்வானி உள்ளிட்ட தலைவர்களுக்கு மிக பலத்த பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. விமான நிலையத்திலிருந்து அத்வானி தங்கும் இடம், மாநாட்டுத் திடல் உள்ளிட்டவற்றுக்கு தீவிரப் பாதுகாப்பும், கண்காணிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாடு தமிழக அரசியலில் திருப்புமுனையாக அமையும் என்று பாஜக தலைவர்கள் கூறி வருவதால் பாஜகவினர் மட்டுமல்லாது பிற கட்சியினர் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications