கே.ஜி. பாலகிருஷ்ணன் வழக்கில் மத்திய அரசு முடிவெடுக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி: மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுமான கே.ஜி. பாலகிருஷ்ணன் மீதான நடவடிக்கைக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
வழக்கு என்ன?
தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் இருந்து வருகிறார். அவர் தலைமை நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவரும் அவரது உறவினர்களும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தனர் என்பதால் அவரை மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கக் கோரி வழக்குத் தொடரப்பட்டது.
மேலும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக உள்ளவரை குடியரசுத் தலைவர்தான் பதவி நீக்கம் செய்ய வேண்டும். இதனால் குடியரசுத் தலைவரின் அறிவுரையைப் பெற்று உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் பி.எஸ். செளகான், ஜே.எஸ். கேகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் மத்திய அரசின் நிலைப்பாட்டையும் உச்சநீதிமன்றம் கேட்டறிந்தது.
தீர்ப்பு
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி பாலகிருஷ்ணன் மீதான ஊழல் வழக்குகளை விசாரிப்பது தொடர்பாக குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கோரக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் நீதிபதி பாலகிருஷ்ணன் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பது தொடர்பாக மத்திய அரசே முடிவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications