அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் ஹத்ப்-III பாக். ஏவுகணை சோதனை வெற்றி
இஸ்லாமாபாத்: அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று இலக்கைத் தாக்கும் திறன் கொண்ட ஹத்ப்-III ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் ஏவுகணைகளை சோதனை செய்வதில் பாகிஸ்தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. கடந்த மாதம் 25ம் தேதி தான் அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று இலக்கைத் தாக்கும் ஷாஹீன்-1 ஏ (எ) ஹத்ப்-4 என்ற ஏவுகணையை விண்ணில் ஏவியது. இந்நிலையில் இன்று மீண்டும் ஒரு ஏவுகணையை சோதனை செய்துள்ளது. ஹத்ப்-III என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று 290 கிமீ தூரத்தில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய வல்லமை உடையது.
கடந்த மாதம் சோதனை செய்யப்பட்ட ஏவுகணை எவ்வளவு தூரம் சென்று தாக்கும் என்பதே தெரியவில்லை. மேலும் அந்த ஏவுகணை இந்தியாவில் உள்ள எந்த இடத்தையும் தாக்கும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது.
இந்தியா கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் அக்னி-5 ஏவுகணையை சோதனை செய்த சூட்டோடு தான் பாகிஸ்தான் ஷாஹீன்-1ஏ ஏவுகணையை விண்ணில் ஏவியது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications