பிரதமர் நரசிம்மவாராவாம்... சொல்கிறது சி.பி.எஸ்.இ பாடப் புத்தகம்.. மக்களவையில் அதிமுக புகார்
Subscribe to Oneindia Tamil

மக்களவையில் மத்திய கல்வி நிறுவனங்கள் திருத்த மசோதா மீது செம்மலை எம்.பி. பேசியதாவது:
சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகத்தில் அம்பேத்கர் பற்றிய கார்ட்டூன் இடம் பெற்றதால் பெருத்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இத்தகைய விஷயங்கள் இடம்பெறுவது சரியானது அல்ல.
அம்பேத்கர் கார்ட்டூன் மட்டுமே தவறு என்பதும் அல்ல.. கர்நாடக மாநிலத்தில் வினியோகிக்கப்பட்டுள்ள சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகத்தில் பாகிஸ்தான், இந்தியாவின் ஒரு பகுதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசியலமைப்பு சட்டம், முதலாளித்துவத்தை அடிப்படையாக கொண்டது என்றும் கூறப்பட்டுள்ளது. ஆந்திரா பள்ளிகளில் உருது வழி 3-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில், இந்தியாவின் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் என்று அச்சிடப்பட்டுள்ளது என்றார்.அவையில் செம்மலையின் பேச்சு சிரிப்பலையை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications