ரேகா பதவியேத்தா என்னை எதுக்கு ராஜ்யசபா டிவியில் காட்டணும்?: ஜெயா பச்சன் பாய்ச்சல்

நடிகை ரேகாவை காங்கிரஸ் கட்சி மாநிலங்களைவை உறுப்பினராக பரிந்துரைத்தது. அதை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து கடந்த செவ்வாய்கிழமை ரேகா மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார். அவர் பதவியேற்றபோது ராஜ்யசபா தொலைக்காட்சியில் பாலிவுட் நடிகையும், சமாஜ்வாடி கட்சி எம்.பி.யுமான ஜெயா பச்சனை அடிக்கடி காண்பித்தனர்.
ரேகா பதவியேற்கும்போது தன்னை எதற்காக வீடியோவில் காண்பி்த்துக் கொண்டே இருந்தனர் என்று மாநிலங்களவை தொலைக்காட்சி ஒளிபரப்பு செயலாளர் மீது ஜெயா பச்சன் மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரியிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து ஹமீது அன்சாரி மாநிலங்களவை தொலைக்காட்சி சிஇஓவை அழைத்து இது குறித்து விளக்கமளிக்குமாறு கேட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆனால் ஜெயா பச்சன் அப்படி எந்த புகாரும் கூறவில்லை என்று மாநிலங்களவை செயலகம் தெரிவித்துள்ளது.
ஜெயா பச்சனுக்கும், ரேகாவுக்கும் இடையே ஏற்கனவே மோதல் உண்டு. இந்நிலையில் ரேகாவுக்கு மாநிலங்களைவையில் ஜெயா பச்சன் அருகில் இருக்கை கொடுக்கப்பட்டது. ஆனால் ஜெயா அதற்கு எதிர்ப்பு தெரிவி்த்து தனது இருக்கையை மாற்றிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரேகாவுக்கும், அமிதாப் பச்சனுக்கும் இடையே ஒரு காலத்தில் காதல் இருந்ததாகப் பேசப்பட்டது. அந்த விவகாரத்தால் தான் ரேகாவும், ஜெயா பச்சனும் எதிரிகளாகிவிட்டனர்.












Click it and Unblock the Notifications