எதியூரப்பா குடும்பத்தின் முன்ஜாமீன் மீதான விசாரணை மே 25-க்கு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

Yeddyurappa
பெங்களூர்: சுரங்க முறைகேட்டில் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்ததைத் தொடர்ந்து முன்ஜாமீன் கோரி கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 25ம் தேதிக்கு பெங்களூர் சி.பி.ஐ. நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் சுரங்க ஊழல் தொடர்பாக முன்னாள் முதல்வர் எதியூரப்பா, அவரது மகன்கள், மருமகன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரது வீடு மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனை நடைபெற்ற உடனேயே எதியூரப்பா, அவரது மகன்கள் ராகவேந்திரா, விஜயேந்திரா மற்றும் மருமகன் சோஹன் குமார் ஆகியோர் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர்.

இன்று இந்த மனு நீதிபதி சிவலிங்க கவுடா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணையை வரும் 25ம் தேதிக்கு அவர் ஒத்திவைத்தார். மேலும் கோடைவிடுமுறைக்குப் பிறகு வேறு நீதிமன்றம் இதனை விசாரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

சுரங்க ஊழல் வழக்கில் கைதாகி ஏற்கனவே சிறைவாசம் அனுபவித்தவர் எதியூரப்பா என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+