சென்னை சாப்ட்வேர் என்ஜினியர் எரித்துக் கொல்லப்பட்டதன் பின்னணியில் 'முக்கோணக் காதல்'!
சென்னை: சென்னை புறநகரான மீஞ்சூரில் சாப்ட்வேர் என்ஜினியர் பிரதீப் எரித்துக் கொல்லப்பட்டதற்கு காதல் மோதல்தான் காரணம் என்று போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
மீஞ்சூர் அருகே எரிந்த நிலையில் இளைஞர் ஒருவரின் உடல் சில நாட்களுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்டது. அந்த நபர் மதுரையைச் சேர்ந்த பிரதீப் எனத் தெரியவந்தது. பின்னர் தொடர்ந்து நடத்தப்பட விசாரணையில் அவர் டி.சி.எஸ். நிறுவனத்தில் பணியாற்றியவர் என்பதும் தெரியவந்தது. திருமங்கலத்தில் வாடகைக்கு வீடு எடுத்து நண்பர்களுடன் தங்கியிருந்தார்.
இந்த கொலை தொடர்பாக டி.சி.எஸ். நிறுவன ஊழியர்கள் 7 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பெண் சாகவாசம்தான் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என கண்டுபிடித்துள்ளனர்.
பிரதீப்பின் நண்பர் ஒருவர் அவருக்கு வேண்டிய பெண்ணுக்கு வேலைவாங்கித் தருமாறு கூறியுள்ளார். பிரதீப்பும் அப்படியே வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறார். இதன் பிறகு பிரதீப்பிடம் நெருக்கம் காட்டிய அந்த பெண் பிரதீப்பின் நண்பரை கட் செய்துவிட்டார். இதில் ஆத்திரமடைந்துதான் கொலை நடந்திருக்கலாம் என்கின்றனர்.
பிரதீப் பேசிய அனைத்து செல்போன் எண்களையும் போலீசார் அலசி வருகின்றனர். விரைவில் கொலையாளி பிடிபடக் கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications