நெல்லை கண்ணன் பேரணி நடத்தும் அதே நாளில் நெல்லையில் போட்டி பேரணி: நித்யானந்தா
மதுரை: தமக்கு எதிராக மதுரை மற்றும் நெல்லையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு எதிராக போட்டி போராட்டங்களும் பேரணிகளும் நடத்தப்படும் என்று நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
மதுரையில் நித்யானந்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மதுரை ஆதீன மீட்புக்குழு என்ற பெயரில் நெல்லை கண்ணன் வருகிற 27-ந்தேதி நெல்லையில் பேரணியும் மதுரையில் தேவர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்போவதாக அறிவித்துள்ளளனர்.
மதுரை ஆதீன பாதுகாப்புக் குழு
நெல்லை கண்ணன் பேரணி நடத்தும் அதே நாளில், அதே நேரத்தில் மதுரை ஆதீன பாதுகாப்பு குழு சார்பில் நெல்லையில் போட்டி பேரணி நடத்தப்படும். அதே போன்று மதுரையில் போட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான கோவில்களில் இருந்து வரும் வருமானங்கள் மற்றும் அதன் சொத்துக்கள் மூலம் வரும் வருமானங்கள் அந்தந்த ஊர்களுக்கே செலவிடப்படும்.
இலவச மருத்துவ முகாம்
மதுரை ஆதீனத்தின் 26, 27-ந்தேதிகளில் 10 ஆயிரம் பேருக்கு இலவச மருத்துவ முகாம் நடத்த உள்ளோம். மதுரை ஆதீனத்தில் நடைபெறும் இம்முகாமில் அனைத்து தரப்பு நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications