திருச்சியில் காருக்குள் பிணமாக கிடந்த சென்னை ஓட்டுநர்
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே காருக்குள் சென்னையைச் சேர்ந்த ஓட்டுநர் பிணமாக கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மாங்காட்டைச் சேர்ந்த சீனிவாசன் தனியார் வெல்டிங் தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். தொழில் விஷயமாக திருச்சி பெல் நிறுவனத்துக்கு அடிக்கடி சென்று வருவார். இவரது ஓட்டுநர் ராகவேந்திரர்.
சென்னையிலிருந்து நேற்று முன்தினம் திருச்சி வந்த சீனிவாசன், மத்திய பேருந்து நிலையம் அருகே ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். ஓட்டுநர் ராகவேந்திரர் காரிலேயே படுத்துக் கொண்டார்.
இந்நிலையில் நேற்று காலை ராகவேந்திரரை ஓட்டல் அறையிலிருந்து செல்போன் மூலம் சீனிவாசன் பலமுறை அழைத்துள்ளார். ஆனால் ராகவேந்திரரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சீனிவாசன் காரில் சென்று பார்த்தார். அப்போது காரில் அமர்ந்தபடியே ராகவேந்திரர் பிணமாகக் கிடந்தார்.
இதுபற்றி போலீசாருக்கு சீனிவாசன் தகவல் கொடுத்தார். ராகவேந்திரர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் காருக்குள் சோதனை நடத்தியதில் மதுபாட்டில்களும், சில மாத்திரைகளும் கிடந்தன. அளவுக்கு அதிகமாக மது குடித்ததால்தான் ராகவேந்திரர் இறந்தாரா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராகவேந்திரர் அளவுக்கு அதிகமாக மதுகுடித்ததால் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications