சென்னை வேளச்சேரி பி.பி.ஓ. நிறுவனத்தில் தீ விபத்து- ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வேளச்சேரியில் பி.பி.ஓ. நிறுவனம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்தை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.

வேளச்சேரியில் பிரபல பி.பி.ஓ. நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இன்று பிற்பகல் உணவு நேரத்தின் போது திடீரென இந்த நிறுவனத்தின் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

தீ கொழுந்துவிட்டு எரிந்ததைப் பார்த்த பணியாளர்கள் பதறியடித்த நிலையில் வெளியேறினர். தீ வேகமாக பரவியதால் அந்த இடமே புகைமூட்டமாகக் காட்சியளித்தது.

பல்வேறு இடங்களில் இருந்து வந்த தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்க நீண்ட நேரம் போராடின.

தீ விபத்து எப்படி ஏற்பட்டது? சேத விவரங்கள் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தற்போது தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+