சுக்கிரன் கோவிலுக்கு சென்ற நித்யானந்தாவுக்கு கறுப்புக்கொடி!
கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள அக்னீஸ்வரர் கோவிலுக்கு சென்ற மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்புக் கொடி காண்பிக்கப்பட்டது.
மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தா, மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் ஆகியோர் நேற்று பகல் 11.45 மணி அளவில் கும்பகோணம் அருகே கஞ்சனூரில் நவக்கிரகங்களில் சுக்கிரன் தலமாக போற்றப்படும் அக்னீஸ்வரர் கோவிலுக்கு சென்றனர். அங்கு நித்யானந்தாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஏராளமானோர் கூடியிருந்தனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
நித்யானந்தா வந்தவுடன் அங்கு கூடியிருந்தவர்கள் அவருக்கு எதிராக கோஷமிட்டனர். இதற்கிடையே அங்கு கூடியிருந்த ஆதரவாளர்கள் ஆதீனங்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர். பின்னர் அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.
நித்யானந்தா வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க கஞ்சனூர், கோட்டூர், துகிலி, மணலூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகள் மற்றும் கடைகளில் கறுப்புக்கொடி கட்டியிருந்தனர்.












Click it and Unblock the Notifications