2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்: நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் (ஜே.பி.சி) பதவிக்காலம் லோக்சபாவின் குளிர்காலக் கூட்டத்தொடரின் இறுதிநாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொலைத் தொடர்புத் துறையில் பாஜகவின் ஆட்சி நடந்த 1998ம் ஆண்டு முதல் காங்கிரஸ் ஆட்சி அமைந்த 2009ம் ஆண்டு வரை கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகளை ஆராய்வதற்காக கடந்த ஆண்டு ஜே.பி.சி. அமைக்கப்பட்டது.
ஜே.பி.சியின் காலவரம்பு பட்ஜெட் கூட்டத் தொடருடன் முடிவடைவதாக இருந்தது. இதையடுத்து ஜே.பி.சி.யின் காலவரம்பை பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதி வரை நீட்டித்து கடந்த ஆண்டு லோக்சபாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந் நிலையில் ஜே.பி.சிக்கு மீண்டும் கால வரம்பை நீட்டிக்கக் கோரி அதன் தலைவர் பி.சி. சாக்கோ நேற்று லோக்சபாவில் கொண்டு வந்த தீர்மானம் குரல் வாக்கெடுக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக கடந்த ஆண்டு மழைக்காலக் கூட்டத் தொடரின் இறுதி நாளிலேயே ஜே.பி.சி. தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இப்போது நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரின் இறுதி நாளுக்குள் ஜே.பி.சி தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications