ராஜ்யசபா தேர்தலில் ஓட்டுக்கு பணம்': 15 ஜார்க்கண்ட் எம்.எல்.ஏக்கள் வீடுகளில் சிபிஐ ரெய்ட்
ராஞ்சி: ஜார்க்கண்ட் ராஜ்யசபா தேர்தல் ரத்தானது தொடர்பாக அம்மாநில எம்.எல்.ஏ.க்கள் 15 பேரின் வீடுகளில் இன்று சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காலியாக இருந்த 2 ராஜ்யசபா இடங்களுக்கு மார்ச் 30ம் தேதி நடப்பதாக இருந்த தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் கடந்த 3ம் தேதி நடத்தியது. தேர்தல் ரத்தானதற்கு காரணமான ஊழல் மற்றும் குதிரை பேரம் தொடர்பாக ஜார்க்கண்ட் எம்.எல்.ஏ.க்கள் 15 பேரின் வீடுகளில் இன்று சிபிஐ அதிரடி சோதனை நடத்தி வருகிறது. சிபிஐ அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து 32 இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
ராஷ்ட்ரிய ஜனதா தள எம்.எல்.ஏ. சரத் யாதவ், முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. அஜய் மாரு உள்ளிட்ட 15 எம்.எல்.ஏ.க்களின் வீடுகளில் சோதனை நடந்து வருகிறது. ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, அஜ்சு கட்சி, எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனாததளம் மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் வீடுகளில் தான் சோதனை நடக்கிறது.
இது தவிர கொல்கத்தாவில் ஒரு இடத்திலும் இன்று சோதனை நடந்து வருகிறது. மேலும் சுயேட்சை வேட்பாளர் ஒருவரின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் 21ம் தேதி விஷ்ணு பைய்யா(ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா), கே.என். திரிபாதி(காங்கிரஸ்) மற்றும் சுரேஷ் பாஸ்வான்(ராஷ்ட்ரிய ஜனதா தளம்) ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள், சுயேட்சை வேட்பாளரான ஆர்.கே. அகர்வால் மற்றும் அவரது மருமகன் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். தேர்தல் நடப்பதாக இருந்த அன்றைக்கு ஆர்.கே. அகர்வாலின் உதவியாளரின் காரில் இருந்து ரூ.2.15 கோடி ரொக்கத்தை வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டு மே 3ம் தேதி நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications