ஷாருக்கானுக்கு விதிக்கப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்ய மமதா வேண்டுகோள்
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளரான நடிகர் ஷாருக்கான் மும்பை மைதானத்தில் ரகளையில் ஈடுபட்டார் என்பதற்காக அவருக்கு 5 ஆண்டுகள் மைதானத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் மமதா பானர்ஜி கூறியதாவது:
சச்சினையும் ஷாருக்கானையும் நாங்கள் நேசிக்கிறோம். மஹாராஷ்டிரா மாந்ல அரசுடன் நாங்கள் நல்ல உறவில் உள்ளோம். ஷாருக்கான் எங்களது மாநிலத்தின் விளம்பர தூதர்.
ஷாருக்கான் மைதானத்தில் குழந்தைகளுடன் இருந்திருக்கிறார். என்ன நடந்திருந்தாலும் தவறாகப் புரிதல் ஏற்பட்டுவிட்டது.ஷாருக்கானுக்கு தடை விதித்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications