அங்கோலாவில் சிறை பிடிக்கப்பட்டிருக்கும் ஆயிரம் இந்தியர்கள்: தூதருக்கு எஸ்.எம்.கிருஷ்ணா சம்மன்
டெல்லி: அங்கோலா நாட்டின் சிமெண்ட் தொழிற்சாலை ஒன்றின் உரிமையாளரால் சிறைபிடிக்கப்பட்டிருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்களை விடுவிக்க வேண்டும் என்று அந்நாட்டின் இந்தியத் தூதர் மேனுவல் ஈடுடர்டோவிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வலியுறுத்தியுள்ளார்.
அங்கோலா நாட்டின் சும்பே நகரில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் நூற்றுக்கணக்கானோர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தோர். கடந்த சில மாதங்களாக சிமெண்ட் தொழிற்சாலை நிர்வாகம் ஊதியம் வழங்காமல் இழுத்தடித்து வந்தது. இதை எதிர்த்து இந்தியத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியோர் மீது தாக்குதல் நடத்திய சிமெண்ட் தொழிற்சாலை நிர்வாகம், அனைவரையும் சட்டவிரோதமாக சிறைவைத்திருக்கிறது. அனைவரது பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்து வைத்திருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக கிருஷ்ணாவுக்கு ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி கடிதமும் அனுப்பியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக வயலார் ரவி நேற்று நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் அந்நாட்டின் இந்திய தூதருக்கு கிருஷ்ணா சம்மன் அனுப்பியிருந்தார். இதைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு வந்த அங்கோலா தூதரிடம் இந்தியத் தொழிலாளர் விவகாரத்தை சுமூகமாக முடிவுக்குக் கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கிருஷ்ணா வலியுறுத்தினார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications