சரத்பொன்சேகாவுக்கு ஒருவழக்கில் ஜாமீன் கிடைத்தது

2010-ம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது இலங்கை ராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றோருக்கு அடைக்கலம் கொடுத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு கொழும்பு நீதிமன்றம் இன்று நிபந்தனையுடன் ஜாமீன் கொடுத்திருக்கிறது. மேலும் பொன்சேகாவின் பாஸ்போர்ட்டை முடக்கி வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும் முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரின் போது வெள்ளைக் கொடியுடன் வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களை சுட்டுப் படுகொலை செய்த வழக்கில் அவருக்கு இன்னமும் ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் அவர் தொடர்ந்தும் சிறையில் இருப்பார்.
தமது கணவர் பொன்சேகாவுக்கு ஜாமீன் கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது என்று மனைவி அனோமா தெரிவித்துள்ளார்.
மேலும் பொன்சேகாவுக்கு ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் நீதிமன்றத்தில் உற்சாகக் கொண்டாட்டத்தில் வலம் வந்தனர்.












Click it and Unblock the Notifications