முல்லைத்தீவு வனப்பகுதியில் 2 குண்டுகள் வெடிப்பு: இலங்கை ராணுவம் குவிப்பு
முல்லைத்தீவு: முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் 2 முறை சக்தி வாய்ந்த குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது.
இலங்கையில் சுமார் 1.5 லட்சம் ஈழத் தமிழர்களை இலங்கை ராணுவம் ஈவு, இரக்கமின்றி கொன்ற சம்பவம் நடந்து இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்நிலையில் மூன்றாம் ஆண்டு நினைவு நாளான இன்று அதிகாலை 5 மணி அளவில் பரந்தன்-முல்லைத்தீவு நெடு்சாலையில் இருந்து 12 கிமீ வடகிழக்கே உள்ள காட்டுப் பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. அதைத் தொடர்ந்து துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் சுமார் 20 நிமிடங்கள் கேட்டுள்ளது.
இதனால் அப்பகுதி மக்கள் பீதிக்குள்ளாகினர். வெடிகுண்டு சத்தம் வந்த பகுதி நோக்கி ஏராளமான மக்கள் சென்றனர். சிறிது நேரத்தில் நெடுஞ்சாலைக்கு அருகே மீண்டும் குண்டு வெடிக்கிற ச்ததம் கேட்டுள்ளது. அதைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தும் சத்தங்கள் கேட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்றும், காட்டுப்பகுதியை ராணுவத்தினர் சுற்றிவளைத்துள்ளனர் என்றும் இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications