சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நித்யானதாவை கைது செய்ய வேண்டும்: அர்ஜுன் சம்பத்
சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வரும் நித்யானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மதுரை ஆதீனத்தை மீட்பதற்காக 27-ந் தேதி நெல்லையில் பேரணி நடத்த அனுமதி பெற்றுள்ளோம். ஆனால் நித்யானந்தாவோ போட்டி பேரணி நடத்துவேன் என்கிறார்.
நெல்லை பேரணியின் போது சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பு நித்யானந்தாதான். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் நித்யானந்தா தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மதுரை ஆதீனம் தலைமை பொறுப்பு ஏற்றால் பாலியல் வழக்கில் இருந்து விடுதலை பெற முயற்சிக்க முடியும் என்பதற்காகவே பல கோடி ரூபாய் கொடுத்து மதுரை ஆதீனம் பதவியை கைப்பற்றியுள்ளார்.
மதுரை ஆதீனத்தை மீட்க சென்ற சிவனடியார்கள் மீது காலணிகளை வீசியுள்ளனர். இந்த விவகாரத்தில் நித்யானந்தா மீது வழக்கு பதிவு செய்து உடனே கைது செய்ய வேண்டும் என்றார் அவர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications