புதுக்கோட்டை இடைத் தேர்தல்: இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

இந்தத் தொகுதியில் வரும் ஜூன் 12ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வரும் 25ம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுவை திரும்பப் பெற வரும் 28ம் தேதி கடைசி நாள்.
திமுக, மதிமுக, பாமக, காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக போட்டியிடாத நிலையில், இந்த இடைத்தேர்தலில் அதிமுக- தேமுதிக இடையே இருமுனைப் போட்டி உருவாகியுள்ளது.
அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டைமான், தேமுதிக சார்பில் ஜாகீர் உசேன், இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் சீனிவாசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
3 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்:
புதுக்கோட்டை இடைத்தேர்தலைக் கண்காணிக்க, தேர்தல் ஆணையத்தால் 3 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் கலைஅரசி வெளியிட்ட செய்திக் குறிப்பில், தேர்தல் பொது பார்வையாளராக பிரேம்சிங் மெகரா, தேர்தல் செலவினப் பார்வையாளராக ஆர். மோகன், தேர்தல் காவல் துறை பார்வையாளராக ஹேமச்சந்திரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் தேர்தல் செலவினப் பார்வையாளர் ஆர். மோகன், தேர்தல் காவல் துறை பார்வையாளர் ஹேமச்சந்திரன் ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை முதல் புதுக்கோட்டையிலுள்ள ரோசா இல்லத்தில் தங்கி பணிகளை தொடங்கவுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications