பாகிஸ்தானில் 2 போர் விமானங்கள் நடுவானில் மோதி 4 விமானிகள் பலி
பெஷாவர்: பாகிஸ்தானில் 2 பயிற்சி போர் விமானங்கள் நடுவானில் மோதி வீடுகள் மீது விழுந்தில் 4 விமானிகள் பலியானார்கள். வீடுகளில் இருந்த 3 குழந்தைகள், பெண் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
வட கிழக்கு பாகிஸ்தானின் பெஷாவர் அருகே உள்ள ரிசால்பூரில் உள்ள விமானப்படை பயிற்சி அகாடமியிலிருந்து வழக்கமான பயிற்சிக்காக இந்த விமானங்கள் கிளம்பிச் சென்றன.
நெளஷேரா என்ற இடத்தின் மீது பறந்து கொண்டிருந்தபோது அந்த 2 போர் விமானங்களும் நடுவானில் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் அவரை தீப்பிடித்து, வெடித்துச் சிதறி தரையில் விழுந்தன.
நொறுங்கிய விமானங்கள் வீடுகள் மீது விழுந்ததில், அதிலிருந்த 4 பைலட்டுகளும் பலியாயினர். வீடுகளும் சேதமடைந்ததில் 3 குழந்தைகள், ஒரு பெண் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
கடந்த 11ம் தேதி கராச்சி அருகே போர் விமானம் ஒன்று நொறுங்கி விழுந்தது. தற்போது ஏற்பட்ட விபத்து 2வது சம்பவம் ஆகும். இந்த விபத்துகளில் சிக்கிய போர் விமானங்கள் 1968-2000 ஆண்டுகளுக்குள் வெளிநாடுகளில் இருந்து வாங்கப்பட்ட பழமையா விமானங்கள் என்று தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications