தங்கம் விலை கடும் உயர்வு - ஒரே நாளில் ரூ 592 அதிகரிப்பு

சமீப காலமாக தங்கத்தின் விலை மிகவும் அதிகரித்து வருகிறது. ஒரு சில நாட்களில் 10 - 20 என விலை குறைவதும், பின்னர் மிக அதிக அளவில் விலை உயர்வதுமாக உள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வெகுவாக குறைந்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இதேபோல் வெள்ளியின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
சென்னையில் நேற்று முன்தினம் 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.2,653-க்கு விற்கப்பட்டது. அதாவது ஒரு சவரன் விலை ரூ.21 ஆயிரத்து 224 ஆக இருந்தது. ஆனால் நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.592 அதிகரித்தது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.2,727-க்கு விற்றது. சவரன் ரூ.21 ஆயிரத்து 816-க்கு விற்கப்பட்டது.
இதேபோல் வெள்ளியின் விலையும் அதிகரித்துவிட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் வெள்ளியின் விலை 56 ரூபாய் 30 காசாக இருந்தது. இந்த விலை நேற்று 57 ரூபாய் 40 காசாக உயர்ந்தது. இதன் மூலம் வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் 10 அதிகரித்து உள்ளது.












Click it and Unblock the Notifications