கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஆகஸ்டு மாதம்தான் மின் உற்பத்தி தொடங்கும்

கூடங்குளத்தில் 2அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அணு உலைக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்றதால் அணு உலைப் பணிகள் முடங்கிப் போயின.
தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால் தற்போது கூடங்குளத்தில் அணுமின் நிலையப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தற்போது மாதிரி எரிபொருளை அகற்றி விட்டு யுரேனியத்தை நிரப்புவதற்கான பணிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் இந்திய அணுமின்கழக இணையதளத்தில், கூடங்குளம் அணுமின்நிலையத்தின் முதல் பிரிவில் 99.3 விழுக்காடு பணிகள் கடந்த ஏப்ரல் மாதமே முடிந்து விட்டன. அங்கு வணிக ரீதியிலான மின் உற்பத்தி வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும். 2-வது பிரிவில் 94.7 விழுக்காடு பணிகள் முடிந்துள்ளன. இந்த பிரிவு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் செயல்பட தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது..
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எவ்வளவு மின்சாரம் உற்பத்தியாகும்? அதில் தமிழகத்துக்கு எவ்வளவு கிடைக்கும்? என்பது போன்ற தகவல்கள் உறுதிப்படாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications