இத்தாலிய கடற்படையினரின் ஜாமீன் மனுவை நிராகரித்தது கொல்லம் நீதிமன்றம்
கொல்லம்: தமிழக மீனவர்களைப் படுகொலை செய்த இத்தாலிய கடற்படையினரின் ஜாமீன் மனுக்களை கொல்லம் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக மீனவர்கள் இருவரை கேரள கடற்பரப்பில் இத்தாலிய சரக்குக் கப்பலில் இருந்த இரு கடற்படையினர் சுட்டுக் கொன்றனர். இதைத் தொடர்ந்து நீண்ட போராட்டத்துக்குப் பிறகு இத்தாலிய கடற்படையினர் இருவர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் இத்தாலிய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு படுகொலையானோர் குடும்பத்துக்கு தலா ரூ1 கோடி கொடுத்தது. மேலும் உச்சநீதிமன்ற அனுமதியுடன் இத்தாலிய சரக்குக் கப்பல் நாட்டை விட்டு வெளியேறவும் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் இரு கடற்படையினர் மீதும் கொல்லம் நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இருவரும் கொல்லம் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை கொல்லம் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.












Click it and Unblock the Notifications