டெங்குக்கு மேலும் ஒரு குழந்தை பலி- உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு
திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் டெங்கு கய்ச்சலுக்கு மேலும் ஒரு குழந்தை பலியானதைத் தொடர்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 23 பேர் டெங்கு காய்ச்சல் தாக்கி உயிரிழந்துள்ளனர். சுரண்டை அருகே ராஜபாண்டி கிராமத்தைச் சேர்ந்த பூசைபாண்டியனின் ஒரு வயது குழந்தை உஷா டெங்கு தாக்கி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது. சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பலியானது. இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 200க்கும் மேற்பட்டோர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றும் 20க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டனர். இதில் டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்போருக்கு சென்னை சிறப்பு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்கின்றனர். மாவட்டத்தில் டெங்கை தடுப்பதற்கு சுகாதார அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications