அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் நாட்டு குண்டு வெடித்ததால் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

திருக்கோவிலூர்: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த அரகண்டநல்லூரில் காவல் நிலைய வளாகத்தில் நேற்று இரவு பயங்கர சப்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இதில் காவல்நிலையம் மற்றும் அருகில் உள்ள டீக்கடையின் கண்ணாடிகள் சிதறின. இரண்டு வீடுகளின் சுவரிலும் விரிசல் ஏற்பட்டது.

வெடிசத்தம் கேட்டவுடன் போலீசார் மற்றும் அக்கம் பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் வெடிசத்தம் கேட்ட இடம் நோக்கி விரைந்து ஓடி வந்தனர். போலீஸ் நிலையத்தில் குப்பை கொட்டும் இடத்தில் வெடிகுண்டு வெடித்தது தெரிய வந்தது.

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் உயர் அதிகாரிகள் வெடிகுண்டு வெடித்த இடத்தை பார்வையிட்ட விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட பொருட்களை போலீசார் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

"திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் வெடிமருந்து பாலிதீன் பையில் இருந்துள்ளது. கத்திரி வெயிலால் ஏற்பட்ட வெப்பத்தில் அந்த வெடிமருந்து வெடித்து சிதறியுள்ளது" என்பது போலீசாரின் கருத்து.

ஆனால் நக்சல் இயக்கத்துடன் தொடர்புடைய விவேக் என்பவரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருவது நக்சல்களுடன் தொடர்பு பற்றிய சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏனெனில் திருக்கோயிலூர் காவல்நிலையத்தில் பணிபுரிந்த 5 காவலர்கள் இருளர் இனப்பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய சம்பவத்துக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இது இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+