புதுக்கோட்டை இடைத்தேர்தல்: வாக்குப் பதிவை புறக்கணிக்க திமுக முடிவு?

ஜூன் 12-ந் தேதி நடைபெற உள்ள புதுக்கோட்டை இடைத்தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. இத்தொகுதியில் அதிமுக மற்றும் தேமுதிக இடையே நேரடிப் போட்டி உருவாகியுள்ளது. தேமுதிகவுக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து திமுக யாரை ஆதரிக்கும்? என்ற கேள்வி எழுந்தது. தற்போதைய நிலையில் தேமுதிகவை ஆதரித்துதான் வாக்களிக்க வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு உள்ளது. திமுகவும் எதிர்காலக் கூட்டணியைக் கருத்தில் கொண்டு இதற்கு ஓகே சொன்னாலும் திமுக வாக்குகள் தங்களுக்குத் தேவை இல்லை என்பது தேமுதிகவின் நிலையாக இருக்கிறது.
இதனால் அதிருப்தியடைந்த திமுக யாருக்குமே வாக்களிக்காமல்விட்டுவிடலாம் என்று முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
திமுகவின் செல்வாக்குமிக்க தொகுதிகளில் புதுக்கோட்டையும் ஒன்று. கடந்த பொதுத் தேர்தலிலும் அதிமுக இங்கு குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றிப் பெற முடிந்தது.
இத்தொகுதியில் 49 ஓ வை பயன்படுத்தலாம் என்று முன்னாள் அமைச்சர் ரகுபதி கூறியதையும் திமுக தலைமை நிராகரித்திருந்த நிலையில் வாக்குப் பதிவை திமுக புறக்கணிப்பது உறுதியாகி உள்ளது.
-
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்!












Click it and Unblock the Notifications