பெண் வருவாய் அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு

Subscribe to Oneindia Tamil

ராசிபுரம்: ராசிபுரம் அருகே பெண் வருவாய் அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ளது செல்லப்பம்பட்டி வருவாய் அலுவலகம். இங்கு வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராணி. இவர் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளதாகவும் அரசு பயனாளர்களிடம் பல்வேறு விதங்களில் அவர் ஆதாயம் அடைந்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது.

இதனையடுத்து, ராசிபுரம் - நாமக்கல் ரோட்டில் அபிராமி காலனியில் உள்ள இவரது வீட்டில் இன்று காலை 7 மணிக்கு சேலம் லஞ்ச ஓழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

மேலும், செல்லப்பம்பட்டியில் உள்ள வருவாய் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் வருவாய் ஆய்வாளர் ராணி அலுவலகத்திலும், வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருவது அந்த பகுதியில் அரசு உயர் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+