தூதரை திரும்ப அழைத்த விவகாரம்: இத்தாலி- இந்திய உறவில் விரிசல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக மீனவர்களை கேரள கடற்பரப்பில் சுட்டுக் கொன்ற சம்பவத்தில் இத்தாலி தூதரை அந்நாடு திரும்ப அழைத்ததின் மூலம் இருநாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் இரு இத்தாலிய கடற்படையினர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தமது நாட்டுக்கான இந்திய தூதரை அந்நாடு திரும்ப அழைத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக தூதரை அழைத்திருப்பதாக அந்நாடு கூறியிருந்தாலும் இருதரப்பு உறவில் விரிசல் ஏற்படுவதற்கான சமிக்ஞையாக இது கருதப்படுகிறது என்பது இத்தாலிய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் மிஸ்துராவின் கருத்து.

மிஸ்துராதான் மூன்று முறை இந்தியாவுக்கு வந்து இந்த விவகாரத்தைக் கையாண்டவர். இவரது பயணத்தைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங்குடன் அந்நாட்டு பிரதமர் மரியோ மோன்டி தொலைபேசியில் ஆலோசனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+