கூடங்குளம் அணு உலையைக் கைவிட வலியுறுத்தி லண்டனில் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

Kudankulam Nuclear Powerplant
லண்டன்: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று போராட்டம் நடைபெற்றது.

கூடங்குளம் அணு உலைக்கு அந்தப் பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் மட்டுமின்றி இந்திய அளவில் அணு உலை எதிர்ப்பாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் போராட்டம் நடத்தினர் .ஆதரவுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அணு உலை எதிர்ப்பாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.

அப்போது அவர்கள், "இனி ஒரு செர்னோபில் வேண்டாம்" :"இனி ஒரு புகுஷிமா வேண்டாம்" ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி இருந்தனர். மேலும் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி மனு ஒன்றையும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் கொடுத்தனர்.

முன்னதாக இங்கிலாந்து நாட்டின் எம்.பி.க்கள் குழு ஒன்று கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதமர் மன்மோகன்சிங், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+