போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துகிறோம்: அமெரிக்காவிடம் இலங்கை உறுதி
Subscribe to Oneindia Tamil
வாசிங்டன்:. போர்க் குற்றங்கள் குறித்து இலங்கை அரசு விசாரணை நடத்தும் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரியிடம் உறுதி அளித்துள்ளார்.
அமெரிக்க சென்றுள்ள பீரிஸ், ஹிலாரியுடன் ஆலோசனை நடத்தினார். இலங்கையின் தற்போதைய நிலைமைகள், போர்க்குற்றங்கள் தொடர்பான செயல் திட்ட அறிக்கையை அப்போது பீரிஸ் கொடுத்ததாகத் தெரிகிறது.
இதற்கிடையில் சர்வதேச நடுவர் மன்றம் இந்த விவகாரத்தில் குறுக்கிடுவது சரியாக இருக்காது என்றும் ஹிலாரியிடம் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இச்சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பீரிஸ், இலங்கையில் இதுவரை என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது நடைபெற்று வரும் நடவடிக்கைகள் என்ன? எதிர்கால திட்டங்கள் என்ன? என்பதை அமெரிக்காவிடம் விளக்கியதாகத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications