ராஜீவ் காந்தி நினைவு நாள்-சோனியா, ராகுல் , பிரியங்கா அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் 21வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ராஜீவ் காந்தியின் நினைவிடங்களில் காங்கிரஸார் அஞ்சலி செலுத்தினர்.
21 வருடங்களுக்கு முன்பு சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டுக்குப் பலியானார் ராஜீவ் காந்தி. அவரது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. வன் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளாக இது அனுசரிக்கப்படுகிறது.
இதையடுத்து டெல்லியில் உள்ள ராஜீவ் சமாதியில், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா, மகன் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் நினைவிடத்திலும் பெரும் திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications