முதியோருக்கு ரூ.200 ஓய்வூதியம் வழங்குவது அவர்களை அவமானப்படுத்துவதாகும்: ஜெய்ராம் ரமேஷ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முதியோர்களுக்கு மாதம் ரூ.200 ஓய்வூதியம் வழங்குவது அவர்களை அவமானப்படுத்துவதாகும் என்று மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தொகையை உயர்த்துமாறு அவர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,

இந்திரா காந்தி தேசிய வயது முதிர்ந்தோர் பென்ஷன் திட்டத்தின்படி நாட்டில் 60 வயதை கடந்த 3 கோடி பேருக்கு வழங்கப்படும் பென்ஷன் தொகை ரூ.200க உள்ளது. இது அவர்களை அவமானப்படுத்துவது போல் உள்ளது. அதனால் இந்த திட்டத்தை மறு ஆய்வு செய்து பென்ஷன் தொகையை உயர்த்தி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மாதா மாதம் பணம் கிடைப்பதில்லை. மாறாக சில மாதங்களுக்கு ஒரு முறை மொத்தமாக வழங்கப்படுகிறது. இம்முறையை மாற்றி மாதா மாதம் குறிப்பிட்ட தேதியில் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

பரிஷத் ஓய்வூதிய திட்ட கன்வீனர் பாபா ஆதவ் மற்றும் அருணா ராய் ஆகியோரை ஜெய்ராம் ரமேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள், பரிஷத் ஓய்வூதிய திட்டத்தில் வறுமைக் கோடுக்கு கீழ் என்ற வறைமுறையை அகற்ற வேண்டும், ஓய்வூதியத்தை ரூ.200ல் இருந்து ரூ.300க உயர்த்த வேண்டும், ஓய்வூதியம் பெறும் வயதை ஆண்களுக்கும் 60ல் இருந்து 55கவும், பெண்களுக்கு 50கவும் குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.

ஆனால் வயது வரம்பை குறைக்க ஜெய்ராம் ரமேஷ் ஒப்புக் கொள்ளவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+