பாகிஸ்தானில் 160 ஆண்டு பழமை வாய்ந்த இந்து கோவில் சேதம்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: வடகிழக்கு பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள இந்து கோவிலை மர்ம நபர்கள் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். மூடப்பட்டிருந்த இநத் கோவில் நீதிமன்ற உத்தரவின்பேரில் கடந்த ஆண்டு தான் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள கோரக்நாத் கோவிலை மர்ம நபர்கள் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர் என்று உள்ளூர்வாசிகளும், போலீசாரும் தெரிவி்ததுள்ளனர். கோவிலில் இருந்த படங்களை எரித்ததோடு மட்டுமல்லாமல் அங்கிருந்த சிவலிங்கத்தை சேதப்படுத்தியுள்ளனர். மேலும் கோவிலி்ல் இருந்த சாமி சிலைகளை தூக்கிச் சென்றுள்ளனர்.

கடந்த 2 மாதங்களில் இந்த கோவில் தாக்கப்பட்டுள்ளது இது 3வது முறையாகும் என்று கோவில் பாதுகாவலர் தெரிவித்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு போட்டால் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்கலாம் என்று இந்து மதத் தலைவர்கள் போலீசாரை வலியுறுத்தினர்.

நேற்று மாலை 6.30 மணி அளவில் கோவிலுக்கு வந்தபோது அங்கு 8 பேரைப் பார்த்ததாக கோவில் பாதுகாவலர் தெரிவித்தார். அவர்கள் சாமி சிலைகளைத் தூக்கி வீசிவிட்டு, அங்கிருந்த படங்கள், புனித நூல்களை எரித்தனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பெஷாவர் உயர் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஆண்டு தான் இந்த 160 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோரக்நாத் கோவில் திறக்கப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் பிரிவிணைக்குப் பிறகு அந்த கோவில் பூட்டியே கிடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+