மத்திய அரசின் 3வது ஆண்டு நிறைவு விழா விருந்து- புறக்கணிக்கும் கருணாநிதி, மம்தா

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் பொறுப்பேற்று இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த நிறைவு விழாவையொட்டி பிரதமர் மன்மோகன் சிங் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தலைவர்கள், எம்.பி.க்கள் ஆகியோருக்கு இன்று இரவு விருந்து அளிக்கிறார்.
இந்த விருந்து நிகழ்ச்சியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி, திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி ஆகியோர் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக விருந்திற்கு செல்லவில்லை. ஆனால் அவருக்கு பதிலாக எம்.பி. டி.ஆர். பாலு கலந்து கொள்கிறார். மத்திய அரசு போதிய நிதி வழங்க மறுக்கிறது என்று புகார் கூறி வரும் மமதா தனது சார்பில் யாரையாவது விருந்துக்கு அனுப்பி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது முறையாக பதவிக்கு வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு துவக்கத்தில் இருந்தே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. மத்திய அரசு 3வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடும் இன்று ஆந்திர மாநிலத்தில் இரு ரயில்கள் மோதியதில் 16 பேர் பலியாகினர், 35 பேர் காயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications