அணு சக்தியால் இயங்கும் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலில் தீ: 7 பேர் காயம்

அமெரிக்காவின் வட கிழக்கு மைனீ மாகாணத்தில் உள்ள போர்ட்ஸ்மெளத் கடற்படைத் தளத்தில் இந்த USS Miami SSN 755 என்ற நீர்மூழ்கிக் கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது.
இந் நிலையில் அமெரிக்க நேரப்படி புதன்கிழமை மாலை 6 மணியளவில் இதில் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால், இந்தத் தகவல் இப்போது தான் வெளியே தெரியவந்துள்ளது.
தீயை அணைக்க நடந்த முயற்சியில் 4 வீரர்கள், 3 தீயணைப்புப் படையினர் காயமடைந்துள்ளனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ஏவுக்ணைகளை வைக்கும் பகுதி, வீரர்கள் தங்கும் பகுதி தான் சேதமடைந்துள்ளதாகவும், அணு சக்தி உலைக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் அமெரிக்க கடற்படைத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க கடற்படையின் 6வது பிரிவைச் சேர்ந்த இந்த நீர்மூழ்கிக் கப்பல் வழக்கமாக இத்தாலியை மையமாகக் கொண்டு ஐரோப்பிய- ஆப்பிரிக்க கடல் பகுதிகளை கண்காணித்து வரும் ஒன்றாகும். சமீபத்தில் தனது 6 மாத கால பணியை முடித்துக் கொண்டு இந்தக் கப்பல் பராமரிப்புப் பணிகளுக்காக மைனீ கடற்படைத் தளத்துக்கு கொண்டு வரப்பட்டது.












Click it and Unblock the Notifications