இளவரசரையும் அர்த்த மண்டபம் வரை அனுமதிக்க வேண்டாமா?... மதுரை ஆதீனம் ஆதங்கம்!
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
மதுரை ஆதீனம் ஆசிர்வாதம் செய்வதற்கு மட்டுமல்ல. கல்வி, மருத்துவ முகாம் போன்ற பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வருகிறது. இந்த பணியை சிலர் அறியாமையாலும், பொறாமை காரணமாகவும் எதிர்க்கிறார்கள்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அர்த்த மண்டபம் வரை நான் சென்றேன். என்னோடு வந்த இளைய மடாதிபதியை அனுமதிக்கவில்லை. மரபுப்படி மதுரை ஆதீனத்துடன் செல்லும் இளவரசரையும் அர்த்த மண்டபம் வரை அனுமதிக்க வேண்டும். ஆனால் அதற்கு அனுமதிக் வில்லை.
இதுதொடர்பாக கோவில் நிர்வாக அதிகாரியிடம் புகார் தெரிவித்து உரிய நடவடிக்கை இல்லை. எழுத்து பூர்வமான பதிலும் அளிக்கவில்லை. எனவே இதுதொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications