மீன்பிடி தடைக்காலம் நாளை முடிகிறது: மீனவர்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் 13,000க்கும் அதிகமான விசைப்படகுகளில் 2 லட்சம் பேர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.
கடல் வளம் காக்கவும், மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ம் தேதி முதல் மே மாதம் 29ம் தேதி வரை தொடர்ந்து 45 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். தடைக்காலத்தில் படகுகளுக்கு வர்ணம் பூசுதல், என்ஜின் பழுது நீக்குதல், சேதமடைந்த பலகைகளை அகற்றுதல், புரொப்பலர்(இழை) பொருத்துதல், புதிய அலுமினிய தகடுகள் பொருத்துதல் உள்ளிட்ட மராமத்து பணிகளை படகு உரிமையாளர்கள் செய்வர்.
இந்த ஆண்டும் ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை விசைப்படகுகள் கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது. அந்த தடைக்காலம் நாளையும் முடிகிறது. கடந்த சில வாரங்களாக நிலவிய தட்பவெட்ப நிலைகளால் மீன்வரத்து அதிகம் இருக்கும் என கடல் வள ஆராய்ச்சியாளர்கள், மீனவர்கள் கணித்துள்ளனர். மீன்பிடி தடைக்காலம் நாளை முடிவடைவதை அடுத்து நாளை மறுநாள் காலை படகுகள் கடலுக்கு செல்ல டோக்கன் வழங்கப்படுகிறது. இதனால் வெளியூர் சென்று சொந்த ஊர்களுக்கு திரும்பிய மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications