கடைசி நிமிடத்தில் சாட்டை எடுத்த சகாயம்: ஊழல் தாசில்தார், வி.ஏ.ஓ.க்கள் சஸ்பெண்ட்
மதுரை: பிரச்சனைக்குரிய நிலத்திற்கு பட்டா வழங்கிய அதிகாரிகளை மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
மதுரை மாவட்டத்தில் ஒரு தனியார் நில விற்பனை மற்றும் பட்டா மாறுதல் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிரச்சனைக்குரிய நிலத்திற்கு கடந்த 2010ம் ஆண்டு மூன்று பட்டாக்களை வழங்கிய அப்போதைய வடக்கு தாசில்தார் அர்ஜுனன் (தற்போது விமான நிலைய நில எடுப்பு தாசில்தார்), வருவாய் ஆய்வாளர் சுரேஷ் பிரட்ரிக், சிறுதூர் வி.ஏ.ஓ.ஜோதிபாசு ஆகியோரை மதுரை கலெக்டர் சகாயம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
அதே போல கடந்த மே 21ம் தேதி நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பொய்கரைப்பட்டி வி.ஏ.ஓ. பேரின்பத்தின் லஞ்சம் மற்றும் அடாவடி குறித்து பொது மக்கள் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் வி.ஏ.ஓ. பேரின்பத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்ட கலெக்டர் சகாயம் இன்று பணியில் இருந்து விடைபெற்றார். அவருக்கு பதிலாக அன்சுல் மி்ஸ்ரா மதுரை மாவட்ட கலெக்டராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications