ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் தமிழர்கள் ஆர்பாட்டம்
லண்டன்: லண்டனுக்கு வருகை தரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே லண்டன் செல்லவிருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பும், எச்சரிக்கையும் தெரிவித்து இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்திற்கு முன்பு தமிழ் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழின அழிப்பை மேற்கொண்டு, போர்க்குற்றம் புரிந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை இங்கிலாந்து மகாராணியின் வைரவிழா நிகழ்ச்சிக்கு அழைத்திருப்பது தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தும் செயலாகும். மேலும், போர்க்குற்றவாளி இங்கிலாந்து மண்ணில் காலடி எடுத்து வைப்பதை தமிழ் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உறுதிபட தெரிவித்தனர்.
இந்த எச்சரிக்கையையும் மீறி ராஜபக்சே லண்டனில் காலடி எடுத்து வைத்தால் தமிழ் மக்களின் செயல்பாடுகள் இங்கிலாந்து மகாராணியின் வைரவிழா நிகழ்ச்சிக்கு எதிர்வினையாக அமையும் என்றும், இதனை தமிழ் மக்கள் விரும்பவில்லை என்பதால், ராஜபக்சேவின் வருகையை முன்கூட்டியே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications