தென்மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை

மத்திய அரசு கடந்த 23ம் தேதி நள்ளிரவு பெட்ரோல் விலையை ஓரேயடியாக லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தியது. இதையடுத்து சென்னை மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடாகி விடடது. போதிய வினியோகம் இல்லாததால் பல பெட்ரோல் பங்குகள் செயல்படவில்லை. மீதமுள்ள பங்குகள் பெட்ரோல், டீசல் இருப்பு இருக்கும் வரை திறந்துவிட்டு காலியானவுடன் மூடுவிடுகின்றன.
இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை. இந்த நான்கு மாவட்டங்களிலும் பாரத் பெட்ரோலியம் சார்பில் 120 பெட்ரோல் பங்குகளும், இந்தியன் ஆயில் சார்பில் 207 பங்குகளும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் சார்பில் 113 பங்குகளும் உள்ளன.
நான்கு மாவட்டங்களுக்கும் நாள் ஒன்றுக்கு 1900 கிலோ லிட்டர் டீசலும், 600 கிலோ லிட்டர் பெட்ரோலும் தேவைப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டதால் கரூரில் உள்ள டிப்போவில் இருந்து டீசல் கொண்டு வரப்பட்டது. தற்போது கொச்சியில் இருந்து டீசல், பெட்ரோல் வருவதால் தட்டுப்பாடு சீராகி வருகிறது.












Click it and Unblock the Notifications