தேசிய அளவில் இடதுசாரிகளை உள்ளடக்கிய 3-வது அணிக்கு பேச்சுவார்த்தை தொடக்கம்: லாலு பிரசாத் தகவல்

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய லாலுபிரசாத் யாதவ் கூறியுள்ளதாவது:
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக பாரதிய ஜனதா அறிவித்தவுடன் அந்தக் கூட்டணியிலிருந்து பல தோழமைக் கட்சிகள் வெளியேறும்; அந்தக் கட்சியிலேயே மோடியின் தலைமையை விரும்பாதவர்கள் இருப்பதால் அந்தக் கட்சியே பிளவுபடும். பிகாரிலும் நிதீஷ் குமார் மற்றும் பாரதிய ஜனதாவின் சுசீல் குமார் மோடிக்கும் பிரச்சனை உருவாகி உள்ளது.
பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்), சுசீல்குமார் மோடி அழைத்தார் என்பதற்காக மம்தா பானர்ஜி மீண்டும் பாஜக கூட்டணிக்குச் செல்ல மாட்டார்; அவர் மிகுந்த பக்குவம் உள்ள அரசியல் தலைவர். தன்னுடைய செல்வாக்கை வீணாக இழக்க மாட்டார் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications