வெயிலுக்காக பள்ளிகள் திறப்பு தள்ளிப் போடப்பட மாட்டாது- கல்வித்துறை
சென்னை: தமிழகத்தில் கத்திரி வெயில் முடிந்து வி்ட்ட போதிலும் வெயிலின் தாக்கம் சற்றும் குறையாமல் இருப்பதால் பள்ளிக்கூடத் திறப்பு தள்ளிப் போகுமா என்ற மக்களின் எதிர்பார்ப்புக்கு கல்வித்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. வெயிலின் உக்கிரம் படிப்படியாக குறையும் என்பதால் மறு திறப்பு தள்ளிப்போக வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோடை விடுமுறைக்குப் பின்னர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் ஜூன் 4 மற்றும் 7ம் தேதி முதல் திறக்கப்படவுள்ளது.
ஆனால் தமிழகத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. தொடர்ந்து பல ஊர்களில் 100 டிகிரியைத் தாண்டியே வெயில் உள்ளது. இதனால் மாணவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். பெற்றோரும் கவலையில் உள்ளனர். வெயில் சற்று குறைந்த பி்ன்னர் பள்ளிகளைத் திறக்கலாமே என்று பெற்றோர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆனால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகாது என்று அதிகாரிகள் கூறுகி்ன்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில் கத்திரி வெயில் முடிந்து விட்டதால் வெயிலின் உக்கிரம் படிப்படியாக குறைந்து விடும். எனவே பள்ளிகள் திறப்பு தள்ளிப்போடப்பட மாட்டாது என்றனர்.