குரூப் 4, 8 தேர்வு விண்ணப்ப கட்டணம் செலுத்த நாளை கடைசி நாள்
சென்னை: குரூப் 4 மற்றும் குரூப் 8 தேர்வுக்களுக்கான விண்ணப்ப கட்டணம் செலுத்த நாளை கடைசி நாளாகும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4 ல், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர், வரைவாளர் ஆகிய பதவிகளுக்கான 1,0718 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதே போல தொகுதி 8ல் நிர்வாக அலுவலர் நிலை 4ல் 75 பணியிடங்கள் நிரப்ப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் 27ம் தேதி வெளியானது.
விண்ணப்பங்களை இணையதளம் வழியாக சமர்ப்பிக்க கடைசி நாள் ஜூன் 4ம் தேதி என்றும், வங்கிகளில் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள் ஜூன் 6ம் தேதி என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளதால் அவர்களின் நலன் கருதி, விண்ணப்ப கட்டணம் செலுத்துவற்கான காலக்கெடு ஜூன் 8ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, குரூப் 4 மற்றும் 8 தேர்வுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த நாளை (ஜூன் 8 ) கடைசி நாளாகும்.