கண் அறுவை சிகிச்சையால் ஓய்வெடுக்கிறாராம் சசி: சொத்து குவிப்பு வழக்கை "இழுத்தடி...."க்கும் சசிகலா

1991-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த போது ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்பது வழக்கு. இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நீண்ட இழுத்தடிப்புகளுக்குப் பிறகு ஜெயலலிதாவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. ஆனால் சசிகலாவிடம் வாக்கு மூலம் பெறுவதற்கும் போதும் போதும் என்றாகிவிடும் போல் இருக்கிறது.
பலமுறை கடுமையாக எச்சரித்த போதும் அவ்வப்போது நீதிமன்றத்தில் ஆஜராகமல் ஏதோ ஒரு காரணம் சொல்லி சசிகலா டிமிக்கி கொடுத்தே வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். நேற்றைய விசாரணையின் போதும் சசிகலா ஆஜராகவில்லை. அவர் சார்பில் வழக்கறிஞர் மணிசங்கர் மனு ஒன்றை நீதிபதி மல்லிகார்ஜூனையாவிடம் கொடுத்தார். அதில், சசிகலாவுக்கு கண் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளதால் மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி ஓய்வெடுத்து வருகிறார் என்று கூறப்பட்டிருந்தது.
இதில் நீதிபதி மல்லிகார்ஜுனையாவும் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவும் செம கடுப்படைந்தனர். சசிகலாவுக்கு அறுவை சிகிச்சை செய்ததற்கான மருத்துவ சான்றிதழ் எங்கே என்றும் ஆச்சார்யா கேள்வி எழுப்பினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வரும் 18-ந் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
அன்றைய தேதியில் என்ன சிறப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வெடுப்பாரோ சசிகலா? என்கிறது பெங்களூர் நீதிமன்ற வட்டாரம்












Click it and Unblock the Notifications