தேங்காய் விலை வீழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி- 3 ஆயிரம் தேங்காயை உடைத்து போராட்டம்

Subscribe to Oneindia Tamil

Coconut farmers Condemned falling prices
பட்டுக்கோட்டை: தேங்காய் விலை வீழ்ச்சியை கண்டித்து பட்டுக்கோட்டையில் தென்னை விவசாயிகள் நேற்று பேரணியாக சென்று ரோட்டில் தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேங்காய் விலை வீழ்ச்சியை கண்டித்து தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பேரணி மற்றும் தேங்காய் உடைப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது.

ஒரு தேங்காயை உற்பத்தி செய்ய 8 ரூபாய் ஆகிறது. ஆனால் ரூ3.50க்கு தான் விற்கிறது. இதனால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. எனவே தமிழக அரசு தேங்காய்க்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை

இதனை வலியுறுத்தி அறந்தாங்கி ரோடு காந்தி சிலையிலிருந்து பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் நோக்கி பேரணி நடத்தப்பட்டது. பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், அதிராம்பட்டினம், ஒரத்தநாடு, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து தென்னை விவசாயிகள் 3,000 பேர் கலந்து கொண்டனர். பேரணி முடிவில் பேருந்து நிலையம் அருகே ரோட்டில் 3000 தேங்காயை உடைத்து போராட்டம் நடத்தினர்.

உரித்த முழுதேங்காய் 1 கிலோ ரூ.25 என நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும். ஒரு கிலோ கொப்பரைக்கு குறைந்தபட்சம் ரூ.75 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை தென்னை விவசாயிகள் முன்வைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+